இலங்கையில் ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மைகள் அல்லது குடியியல் குழப்பங்களின் விளைவாக உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் நினைவகமொன்றை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்படி காரணங்களினால் உயிர் நீத்த பொது மக்கள், முப்படையினர் மற்றும் பொலிஸ் அலுவலர்கள், முன்னாள் போராளிகள் உள்ளிட்ட அனைத்து நபர்களையும் நினைவு கூருவற்கான நினைவகத்தை நல்லிணக்கம் மற்றும் மீளிணைப்பின் அடையாளமாகக் கொழும்பு நகரில் பொருத்தமான இடமொன்றில் நிர்மாணிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.