உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி இந்த வாரம் வேட்பு மனு கோரலுக்கான வர்த்தமானி தோதல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்படவுள்ளது.
இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டு 3 நாட்களுக்குள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
அதன்படி மார்ச் மாதம் 10ம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூருகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.