உள்ளாட்சி தேர்தலுக்கான நிதியை விடுவிக்கக் கோரி நிதி அமைச்சரான ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணைக்குழு கடிதம் அனுப்பியுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான தீர்மானங்களை எடுக்க நிதி அமைச்சரின் அனுமதி பெறப்பட வேண்டும் என, நிதி அமைச்சின் செயலாளர் அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில், வாக்கெடுப்புக்கு தேவையான நிதியை விடுவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றையும் வாசியுங்கள்