கருப்பு சந்தையில் 270 ரூபாவாக வீழ்ச்சியடைந்த டொலர்

1 year ago
aivarree.com

கருப்பு சந்தைகளில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலர் சுமார் 270 ரூபா அளவிலேயே பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

பணப் பரிமாற்ற தரகர்  ஒருவரை மேற்கோள்காட்டி, சண்டே ஒப்சேர்வர் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.  

மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ விலையின்படி, டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூ. 317ஆக நிலவியது. 

ஆனால் புறக்கோட்டை, வெள்ளவத்தை, காலி, பெந்தோட்டை மற்றும் பேருவளை ஆகிய இடங்களில் உள்ள கருப்பு சந்தையில் 270 ரூபாவுக்கு டொலர் பெறப்பட்டுள்ளது. 

கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் ரூபாயின் பெறுமதியால் டொலரின் பெறுமதி தினமும் வீழ்ச்சியடைவதாகவும், அது மேலும் சரிவடையும் எனவும் தரகர் தெரிவித்துள்ளார். 

இவற்றையும் வாசியுங்கள்