தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் மீது இலங்கை – இந்திய கடற்பரப்பில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தமிழக மீனவர் சங்கம் தெரிவித்துள்ளது.
தரங்கம்பாடி பகுதியைச் சேர்ந்த மீனவர்களே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
அவர்களது படகுக்குள் நுழைந்த சிலர் அவர்களை தாக்கிவிட்டு, அவர்களிடம் இருந்த 1200 கிலோ மீன்பிடியையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக ராமேஸ்வரம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.