யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவரை கிணறு அமைந்துள்ள பகுதியில் அரச மரம் ஒன்றுக்கடியில் வைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது.
அந்தப் பகுதியில் இருந்த இராணுவத்தினரே குறித்த சிலையை அங்கு வைத்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில் அதற்கு ஏற்ப ட்ட எதிர்ப்பு காரணமாகவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலையீட்டையும் அடுத்து சிலை இராணுவத்தினரால் எடுத்து செல்லப்பட்டதாக எமது செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.