செப்டெம்பருக்குள் இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீளும் – ஜனாதிபதி

11 months ago
Sri Lanka
aivarree.com

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை அதன் வங்குரோத்து நிலையை முறியடிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


அரசாங்கத்தின் தற்போதைய முன்முயற்சிகள், குறிப்பாக உள்நாட்டு கடன் மேம்படுத்தல் (DDO) திட்டத்தை ஆதரிக்கும் கூட்டு முயற்சிகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.


இலங்கை பணிப்பாளர்கள் நிறுவகத்தின் (SLID) வருடாந்த பொதுக் கூட்டத்தில் (AGM) இன்று உரையாற்றும் போதே அரச தலைவர் இதனைத் தெரிவித்தார்.