சர்வ கட்சி கூட்டம் நிறைவு

1 year ago
Sri Lanka
aivarree.com

ஜனாதிபதி தலைமையில் சர்வ கட்சி கூட்டம் சற்று முன்னர் நிறைவடைந்தது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அரசியல் தீர்வினை அடைவது தொடர்பாக கட்சிகளின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுசீரமைப்புக்கான சர்வ கட்சி கூட்டம் என்ற பெயரில் இந்த கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றிருந்தது.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான யோசனைகளை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கட்சிகளை கோரியதுடன், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் சர்வகட்சி கூட்டத்தை நடத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.