நல்லிணக்கம் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமானது.
இதில் பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
அரசியல் தீர்வினை அடைவதை இலக்காகக் கொண்டு சர்வகட்சி கூட்டத்தை நடத்த ஜனாதிபதி பாராளுமன்றில் அண்மையில் பிரஸ்தாபித்திருந்தார்.
அதன் அடிப்படையில் இந்தக் கூட்டம் தற்போது நடைபெற்றுவருகிறது.