முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – தேராவில் பகுதியில் குப்பி விளக்கு ஒன்று விழுந்து தீப்பற்றியதில் 6 மாதங்களான குழந்தை ஒன்று உயிரிழந்தது.
இந்த சம்பவம் கடந்த ஜனவரி மாத இறுதியில் பதிவானது.
சம்பவத்தில் கடும் காயமடைந்த குழந்தை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தது.
சம்பவம் இடம்பெறும் போது குழந்தையின் பெற்றோரும் வீட்டிலேயே இருந்த போதும், குழந்தையை பாதுகாக்க முடியவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.