தலைமன்னார், மணல்மேடு கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 04 கிலோ கிராம் எடையுள்ள ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த கடற் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக மிதந்து வந்த சாக்கு பைகளை அவதானித்த கடற்படையினர், அதனை மீட்டு சோதனையிட்டபோதே 04 பக்கெட்டுகளிலிருந்து 04 கிலோ 500 கிராம் (ஈரமான எடை) எடையுள்ள போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 67.5 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம், காங்கேசன்துறைக்கு அப்பால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒரு டிங்கி படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் இடைமறித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின்போது 428 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன், இரு சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.