ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமைக் குண்டு வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இடம்பெற்ற இந்த குண்டு வெடிப்பில் ரஷ்யாவின் பிரபல இராணுவ அதிகாரியொருவர் பலியாதனாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவத்தில் Vladlen Tatarsky என்ற இராணுவ அதிகாரியே உயிரிழந்துள்ளார்.
டெலிகிராமில் 560,000க்கும் மேற்பட்ட பின் தொடுவார்களைக் கொண்டுள்ள டாடர்ஸ்கி, உக்ரைனில் ரஷ்யாவின் போர் குறித்து அடிக்கடி விமர்சன ரீதியாக இயங்கும் வர்ணனையை வழங்கிய செல்வாக்கு மிக்க இராணுவ பதிவர்களில் மிக முக்கியமானவர் ஆவார்.
குண்டு வெடிப்பு சம்பவத்தில் மேலும் 25 பேர் காயமடைந்தனர், அவர்களில் 19 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பிராந்திய ஆளுநர் அலெக்சாண்டர் பெக்லோவ் தெரிவித்தார்.