ஏவுகணை ஒன்றின் மூலம் அண்டவெளியிலிருந்து பூமியைப் படம்பிடித்து வடகொரியா வெளியிட்டுள்ளது.
அண்மையில் வடகொரியா ஹவாசொங்-12 என்ற சக்திவாய்ந்த ஏவுகணையைச் சோதனை செய்திருந்தது.
இந்த ஏவுகணையை விண்ணில் செலுத்தி, அதன் மூலம் பூமியைப் படம்பிடித்துள்ளது.
இந்த ஏவுகணை மூலம் அமெரிக்காவின் குவாம் பிராந்தியத்தை இலகுவாக வடகொரியாவிலிருந்து தாக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.