‘உலக வனவிலங்கு நிதியம்’ பாதுகாப்புக் குழு, மீகாங் பகுதியில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 224 உயிரினங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அவற்றில் கண்களைச் சுற்றி ‘பேய்’ வெள்ளை வட்டங்கள் கொண்ட குரங்கு, தவளைகள்; மற்றும் சதைப்பற்றுள்ள மூங்கில் இனங்கள் என்பனவும் அடங்கும்.
அப்பகுதியில் உள்ள உலகின் மிக ஆபத்தான உயிரினங்கள் அடையாளம் காணப்படுவதற்கு முன்பே அழிவை எதிர்கொள்கின்றன.
மீகாங் பிராந்தியம் கம்போடியா, லாவோஸ், மியான்மார், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பெரும் பிரதேசமாகும்.