எரிபொருள் விவகாரம் | உச்ச நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

2 years ago
Sri Lanka
aivarree.com

நாட்டில் எரிபொருளை அனைத்து தரப்புக்கும் சமமாக விநியோகிப்பதற்கான பொறிமுறை குறித்து அறிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த மனுவில் வலுசக்தி அமைச்சு பிரதிவாதி தரப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சம அளவில் எரிபொருளை விநியோகிக்கக்கூடிய திட்டம் குறித்து அடுத்த மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் உச்ச நீதிமன்றில் அறிக்கை முன்வைக்குமாறு, சக்தி வலு அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளது.