எரிபொருள் விலை மாற்றம் வருகிறது

1 year ago
Gossip
aivarree.com

இலங்கையில் அடுத்தவாரம் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் இந்த விலை மாற்றம் ஏற்படவுள்ளது.

அடுத்த மாதம் 1ஆம் திகதியுடன் சமையல் எரிவாயுவின் விலை 500 ரூபாவால் அதிகரிக்கும் என முன்னதாகவே தகவல் வெளியாகி இருந்தது.

உலக சந்தையில் நிலவும் விலை அதிகரிப்பின் காரணமாக உள்நாட்டிலும் சக்திவளத்துக்கான விலைகள் அதிகரிக்கும் என பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் இலங்கையில் எரிபொருளுக்கான தீர்வை வரி அண்மையில் அதிகரிக்கப்பட்ட நிலையில், அடுத்தவாரம் எரிபொருள் விலையும் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.