ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சியின் உறுப்பினர் குழு கூட்டம்

1 week ago
Sri Lanka
aivarree.com

ஆளும் கட்சியின் உறுப்பினர் குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (25) நடைபெற்றது.

இதன்போது அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டம், அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்துதல் மற்றும் சகல தொகுதிகளுக்கும் அபிவிருத்தி திட்டங்களை தயாரித்தல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் தேர்தல்களில் அரசியல் கட்சிகள் எடுக்கும் தீர்மானங்கள் மற்றும் குறிப்பிட்ட இணக்கப்பாடுகளை எட்டுவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.