எரிபொருள் விலை சூத்திரத்தை நீக்க அரசுக்கு அழுத்தம்

1 year ago
Gossip
aivarree.com

நாட்டில் எரிபொருள் விலையை மாதாந்தம் இரண்டு தடவைகள் தீர்மானிக்கும் வகையில் விலைசூத்திரம் ஒன்று அமுலில் உள்ளது.

இதனை நீக்குமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விலை சூத்திரத்துக்கு அமைய எரிபொருள் விலை குறையலாம் என்று எண்ணி, செயற்கையாகவே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு எரிபொருள் விநியோகஸ்தர்கள், எரிபொருள் விலை சூத்திரத்தை நீக்குமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

எனினும் எரிசக்தி அமைச்சு இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Suggest Video

எரிபொருள் இல்லாமல் புத்தாண்டு கொண்டாடும் நிலை?