இந்தோனேஷிய எரிபொருள் சேமிப்பு நிலையத்தில் தீ விபத்து

1 year ago
World
aivarree.com

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் அமைந்துள்ள எரிபொருள் சேமிப்பு நிலையமொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அரசு எரிசக்தி நிறுவனமான பெர்டாமினாவின் எரிபொருள் சேமிப்பு நிலையத்திலேயே இந்த அனர்த்தம் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள காட்சிகள் ஒரு பெரிய தீப்பிழம்பு பற்றி எரிவதையும் மக்கள் பீதியில் ஓடுவதையும் வெளிக்காட்டியுள்ளன.

சம்பவ இடத்தினை அண்மித்த குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், ஜகார்த்தாவின் தீயணைப்புப் படை தீயை அணைக்க 50 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தப்பட்டுள்ளது.

நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் சனிக்கிழமை அதிகாலையில் தீ அணைக்கப்பட்டதாக வடக்கு ஜகார்த்தா தீயணைப்பு அதிகாரி அப்துல் வாஹித் தெரிவித்துள்ளார்.