இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை சுமார் 40% வரை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
இதற்கான முன்மொழிவு ஏற்கனவே மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சால் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை பத்திரமும் அடுத்த மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக லங்கா சி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது
(Aivarree)