இந்தியாவில் நெடுஞ்சாலையில் பயணித்த பஸ் தீக்கிரை ; குழந்தைகள் உட்பட 25 பேர் பலி

10 months ago
World
aivarree.com

மகாராஷ்டிராவில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் பயணிகள் பஸ்ஸொன்று தீப்பிடித்து எரிந்ததில் மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தது 25 பேர் உயிரிழந்தனர்.

இந்த அனர்த்தத்தில் மேலும் 8 பேர் காயமடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புனே நோக்கிச் சென்று கொண்டிருந்த குறித்த பஸ்ஸில் சுமார் 33 பேர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமுருத்தி-மஹாமார்க் அதிவேக நெடுஞ்சாலையில் சனிக்கிழமை (ஜூலை 01) அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

புல்தானா மாவட்டத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள மின்கம்பத்தில் மோதி பஸ் கவிழ்ந்து தீப்பிடித்ததாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.