இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் தனியார் பஸ்களுக்கான கட்டணம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முதல் குறைக்கப்படவுள்ளது.
அதன்படி குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 34 ரூபாவிலிருந்து 30 ரூபாவாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணையகம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் ஏனைய கட்டணங்களின் விபரம் தொடர்பில் நாளை அறிவிக்கப்படும் என்றும் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
அதற்கிணங்க பஸ் கட்டணங்களையும் குறைக்குமாறு போக்குவரத்து அமைச்சர் விடுத்த உத்தரவுக்கு இணங்கவே பஸ் கட்டணங்கள் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.