முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை விடுதலை செய்யுமாறு கொழும்பு, மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மிஹின் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றிய காலத்தில், உபகரணங்கள் கொள்வனவு செய்ததில் அரசாங்கத்திற்கு 883 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந் நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றபோது, குறித்த வழக்கை தொடர்ந்து முன்னெடுத்துச்செல்ல முடியாது என சஜின் வாஸ் குணவர்தன சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் ஆட்சேபனை முன்வைத்தனர்.
அதனை ஏற்று கொழும்பு மேல் நீதிமன்றம் மேற்கண்ட தீர்ப்பை வழங்கியது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.