பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில் பலர் பலியாகி இருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரையில் கிடைத்த தகவல்களின்படி 20 பேர் மரணித்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சுமார் 90க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வெடிப்பு காரணமாக பள்ளிவாசல் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாகவும், கட்டடத்தின் இடிபாடுகளுக்கு இடையில் பலர் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.