வங்குரோத்து நிலையிலிருந்து இலங்கை சில மாதங்களில் மீளுமாம் | மனுஷ கூறுகிறார்

1 year ago
Sri Lanka
aivarree.com

இலங்கை, இந்த ஆண்டில் இன்னும் சில மாதங்களில் வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுவிடும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர் தெரிவித்த சில கருத்துகள்:-

  • இலங்கை ஒரு வங்குரோத்தடைந்த நாடு அல்ல.
  • மீண்டும் எழுச்சி பெறும் நாடு
  • “வங்குரோத்து’ என்ற முத்திரை விரைவில் நீங்கும்.
  • நாங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்குவோம்.
  • புதிய முதலீடுகளை கொண்டு வர முடியும்.
  • சம்பளம் உயர்த்தப்படும்.
  • வரி மற்றும் வங்கி வட்டி விகிதங்கள் குறையும்.
  • அதன்மூலம், நாடு முன்னேறுவதற்கான பாதையைத் ஆரம்பிக்கும்.
  • பலரால் இந்த முன்னேற்றத்தை பொறுத்துக்கொள்ள முடியாது.
  • எனவே இதனை நாசப்படுத்துவதற்கு எதனையும் செய்ய அவர்கள் தயாராக இருக்கின்றனர்.