இலங்கை, இந்த ஆண்டில் இன்னும் சில மாதங்களில் வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுவிடும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர் தெரிவித்த சில கருத்துகள்:-
- இலங்கை ஒரு வங்குரோத்தடைந்த நாடு அல்ல.
- மீண்டும் எழுச்சி பெறும் நாடு
- “வங்குரோத்து’ என்ற முத்திரை விரைவில் நீங்கும்.
- நாங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்குவோம்.
- புதிய முதலீடுகளை கொண்டு வர முடியும்.
- சம்பளம் உயர்த்தப்படும்.
- வரி மற்றும் வங்கி வட்டி விகிதங்கள் குறையும்.
- அதன்மூலம், நாடு முன்னேறுவதற்கான பாதையைத் ஆரம்பிக்கும்.
- பலரால் இந்த முன்னேற்றத்தை பொறுத்துக்கொள்ள முடியாது.
- எனவே இதனை நாசப்படுத்துவதற்கு எதனையும் செய்ய அவர்கள் தயாராக இருக்கின்றனர்.