இன்றும் (30) நாளையும் (31) மின்வெட்டு அமுலாக்கப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபையின் தலைவர் அறுவித்துள்ளார்.
மேலதிக மின்னுற்பத்திக்கான நீரை, நீர்த்தேக்கங்களில் இருந்து வெளியேற்ற நீர் முகாமைத்துவ செயலகம் இணக்கம் தெரிவித்திருந்தது.
இதன்படி இரண்டு நாட்களுக்கு மின்வெட்டு அமுலாக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, மேலதிக நீர் வெளியேற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.