2022ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளன.
கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் நடைபெற்றிருக்க வேண்டிய இந்த பரீட்சைகள், கொவிட் காரணமாக அதற்கு முந்திய ஆண்டுகளின் பரீட்சைகள் பிற்போன நிலையில், இந்த ஆண்டு நடைபெறுகிறது.
இந்த பரீட்சையின் பெறுபேறுகளை ஏப்ரலுக்கு முன்னதாக வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அய்வரி செய்திகளுக்குத் தெரிவித்தார்.
இந்த ஆண்டுக்கான உயர்தர பரீட்சையை இந்த ஆண்டிலேயே நடத்திவிடுவதற்கும் எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.