கண்டி – நெல்லிகல தேவாலயத்துக்கு யாத்திரை சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது.
இதில் குறைந்தபட்சம் 28 பேர் காயமடைந்துள்ளதாக பேராதனை வைத்தியசாலைத் தரப்பினர் அய்வரி செய்திகளுக்குத் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான பேருந்தில் 47 பேர் பயணித்துள்ளனர்.
இந்த பேருந்து மொரட்டுவையில் இருந்து நெல்லிகல தேவாலயத்துக்கு யாத்திரை சென்றிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.