யாழில் பிக் மீ சாரதி மீது தாக்குதல்

6 months ago
Sri Lanka
aivarree.com

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் ‘பிக் மீ’ சாரதி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பொது முச்சக்கர வண்டி சாரதிகளினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பலாலி வீதியில் திருநெல்வேலி பழம் வீதி அருகில் இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்றபோதும் பொலிஸாரும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்து கொண்டதாக பிக்மீ சாரதி கவலை வெளியிட்டார்.

அண்மைக் காலமாக யாழ்ப்பாணம் பகுதியில் பிக் மி சாரதிகள் மீதான தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.