எரிபொருள் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்கவுள்ள சினோபெக்

1 month ago
aivarree.com

இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க சீனாவின் சினோபெக் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சினோபெக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று தமக்கு அறிவித்ததாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஹம்பாந்தோட்டையில் நிறுவப்படவுள்ளதுடன், அது தொடர்பான ஒப்பந்தத்தில் விரைவில் கைச்சாத்திடுவதற்கு சினோபெக் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

ஜூன் மாதம் இத்திட்டத்தை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடந்த நவம்பர் மாதம் அமைச்சரவை இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.