சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி

5 months ago
Sri Lanka
aivarree.com

2022ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்பார்த்து முழு இலங்கையும் காத்திருக்கிறது.

இந்த பரீட்சைகள் கடந்த மே – ஜுன் மாதங்களில் நடைபெற்றிருந்தன.

பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் தரவு தளத்தில் பதிவேற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பரீட்சைகள் ஆணையாளர் இதனை உறுதிப்படுத்தி இருந்த நிலையில், இந்த பணிகள் நிறைவடைந்து பெறுபேறுகள் சரிபார்க்கப்பட்டதன் பின்னர் அது வெளியிடப்படும் என்று அவர் முன்னதாகவே அறிவித்திருந்தார்.

இதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் அல்லது மூன்றாம் திகதிக்கு முன்னர் பரீட்சை பெறுபேறுகள் வெளியாக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் அய்வரி செய்திகளுக்கு தெரிவித்தார்.

செய்திகளை விரைவாக வட்சப்பில் அறிந்து கொள்ள எமது வட்சப் குழுவில் இணைந்திருங்கள்.

https://chat.whatsapp.com/LMn23Ym9ANODy3MsiWMFNKhttps://chat.whatsapp.com/LMn23Ym9ANODy3MsiWMFNK