தேசிய மக்கள் சக்தியின் மே தின பேரணி தொடர்பில் அறிவிப்பு

2 weeks ago
Sri Lanka
aivarree.com

தேசிய மக்கள் சக்தியின் மே தின பேரணியை நான்கு இடங்களில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பு, மாத்தறை, அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்தப் பேரணிகள் நடைபெறும் இடங்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தமது மே தின பேரணியை நடாத்துவதற்கு காலி மைதானத்தை வழங்குமாறு கோரிய போதிலும் அது வழங்கப்படவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.