இலக்கை விட அதிகரித்த அரச வருமானம்

1 week ago
aivarree.com

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் எதிர்பார்த்த அரச வருமானத்தை விட அதிக வருவாய் கிடைத்துள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அது எதிர்பார்க்கப்பட்ட வருமானமான 787 பில்லியன் ரூபாவை விட 6% அதிகம் என அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டின் பிரதான வருவாயை கொண்டுவரும் சுங்க திணைக்களம், கலால் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களங்கள் 834 பில்லியன் ரூபாயை ஈட்டியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சுங்கத் திணைக்களம் 353 பில்லியன் ரூபா இலக்கை எட்டியுள்ளதாகவும், கலால் திணைக்களம் 96% வருமானத்துடன் 51 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட 381 பில்லியன் ரூபாவை விட 13% அதிகரிப்புடன் 430 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வருவாய் இலக்குகளை மிஞ்சும் மற்றும் நேர்மறையான வருவாய்ப் போக்கை வெளிப்படுத்தும் நிலையில், 2024 வருவாய் இலக்குகளை அடையக்கூடிய ஆண்டாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் 2024 ஆம் ஆண்டில் அரசாங்கம் 4,106 பில்லியன் ரூபா வருமானத்தை எதிர்பார்க்கிறது, அதில் 93% வரி வருமானம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வருவாய் ஈட்டுவதில் ஊக்கமளிக்கும் செயல்திறன் நேர்மறையான பொருளாதார வேகத்தை பிரதிபலிக்கிறது மற்றும் ஆண்டின் பிற்பகுதியில் நாட்டின் நிதி ஆரோக்கியத்திற்கான ஒரு நம்பிக்கைக்குரிய கண்ணோட்டத்தை வழங்குகிறது, எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.