IMF  உடன் இன்று நடந்த பேச்சுவார்த்தை வெற்றி – அமைச்சர் அறிவிப்பு

1 year ago
Sri Lanka
aivarree.com

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவுடன் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.

இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கிருஸ்ணமூர்த்தி சுப்ரமணியன் தலைமையிலான குழுவை அவர் இன்று சந்தித்திருந்தார்.

இதன்போது இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி விரைவில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது தொகை நிதி கிடைக்கப்பெறும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.