முல்லைத்தீவு – கொக்குளாய் பகுதியில் மிக அரிதான திமிங்கிலத்தின் அம்பருடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 கிலோவுக்கும் அதிகமான வெள்ளை மற்றும் கறுப்பு நிறத்திலான இரண்டு வகை அம்பர் அவரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இவற்றை அவர் பல கோடி ரூபாவுக்கு விற்பனை செய்வதற்காக தமது வீட்டில் வைத்திருந்த நிலையில், கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.
அம்பர் என்பது திமிங்கிலத்தின் வாந்தி என்றும், இது பல ஆண்டுகளாக கடலில் மிதந்து பதமடைவதன் காரணமாக, வெளிநாடுகளில் பெரும் கிராக்கி மிகுந்தது என்றும் சொல்லப்படுகிறது.
இதிலிருந்து விலை உயர்ந்த வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப்படுவதுடன், பல நோய்களை குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.