விண்ணப்பிக்காத பாடங்களுடன் வந்த பரீட்சை அனுமதிப்பத்திரம் – குழப்பத்தில் மாணவர்கள்

2 weeks ago
Sri Lanka
aivarree.com

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு இரண்டாம் முறை விண்ணப்பித்த 10,000க்கும் அதிகமான மாணவர்கள் தாங்கள் விண்ணப்பிக்காத பாடத்தை உள்ளடக்கிய பரீட்சை அனுமதிப் பத்திர ங்களைபெற்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தரவிடம் தெரிவிக்கையில், ​​தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.