பயங்கரவாதிகளின் தாக்குதல் எச்சரிக்கை – இந்திய – இங்கிலாந்து போட்டிக்கு பலத்த பாதுகாப்பு

2 months ago
SPORTS
aivarree.com

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி ரான்ச்சியில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியின் போது பயங்கரவாத இடையூறுகள் ஏற்படுத்தப்படும் என்று, அமெரிக்காவில் இருந்து செயற்படும் சீக்கிய தீவிரவாதியான குர்பட்வாண்ட் சிங் பன்னும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் இந்த போட்டியின் போது தாக்குதல் நடத்துமாறு மாவோஸ்ட் தீவிரவாதிகளுக்கும் அவர் வீடியோ ஒன்றின் மூலம் அறிவுறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டிக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்படும் என்று இந்திய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.