மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
முன்னைய காலத்தைப் போல, இக்கால சிறார்கள் எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் கற்க வேண்டும் என, தொலைகாட்சி நிகழ்ச்சியொன்றில் நோயல் பிரியந்த கூறி இருந்தார்.
இது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருந்த நிலையில், அந்த கருத்துக்காக அவர் மன்னிப்பு கோரி, பதவி விலகியுள்ளார்.
மேலும் இந்த கருத்து தொடர்பாக அமைச்சர் கஞ்சன விஜயசேகரவும் மன்னிப்பு கோரியுள்ளார்.