அனுராதபுரம் மாவட்டத்தில் பாடசாலை செல்லும் மாணவர்களில் சுமார் 60 வீதமானோருக்கு பார்வைக் குறைபாடு காணப்படுவது கண்டறியப்பட்டதாக கண் அறுவை சிகிச்சை நிபுணர் குஷானி குணரத்ன தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் மாவட்டத்தின் மிஹிந்தலை மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற கண் மருத்துவ முகாமில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அநுராதபுரம் மாவட்டத்தில் கண் மருத்துவர்கள் சங்கம் ஏற்பாடு செய்து நடத்திய 12 கண்சிகிச்சை முகாம்களின் ஊடாக பார்வைக் குறைபாடுள்ள பாடசாலை மாணவர்களுக்கு இலவச கண்ணாடிகள் வழங்கும் திட்டம்மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற கண்சிகிச்சை முகாம்கள் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்படுகின்றன, அவற்றில் அனுராதபுரம் மாவட்டம் 60% பார்வையற்ற மாணவர்களைக் கொண்ட மாவட்டமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.