நாட்டின் முக்கியமான போதைப்பொருள் வர்த்தகர்களில் ஒருவரான “வெலிவிட்ட சுத்தா” என அழைக்கப்படும் மலலகே சுதத் கித்சிறி இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளதாக கடுவலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையாளர்களாக பட்டியலிடப்பட்டுள்ள சந்தேகநபர்கள் அனைவரும் கைது செய்யப்பட இருப்பதாகவும்,பிரதான சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றமையால் கைது செய்ய முடியாத நிலை காணப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .