EC மற்றும் HRCSL க்கு புதிய தலைவர்கள் நியமனம்

11 months ago
Sri Lanka
aivarree.com

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகிய இரண்டிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று உறுப்பினர்களை நியமித்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் எல்.டி.பி தெஹிதெனிய நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.