மத்திய வங்கியின் நாணய சபை இன்று மாலை அவசரமாக கூடவுள்ளது.
இதன்போது பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இந்த கூட்டமானது வட்டிவீதங்களின் மாற்றம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு இல்லை என்று இலங்கை மத்திய வங்கிய பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
எனவே இந்தக் கூட்டத்தின் பின்னர் வட்டிவீதங்கள் மாறும் என்ற அடிப்படையில் தீர்மானங்கள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.