பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய சோதனைக் கருவி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.
“தானியக்க முக அடையாளப்படுத்தல்” கருவியான (Automated Facial Recognition System) இது, உள்வரும் மற்றும் வெளியேறும் பயணிகளுள் குற்றவாளிகளை அடையாளம் காணும் என தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ்துறை அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் பதில் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோரின் பணிப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.