2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை வினாத்தாள் மதிப்பீடு செய்யும் பணிகள் தற்சமயம் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் ஜூன் மாத இறுதிக்குள் நிறைவடையும் என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) வினாத்தாள் மதிப்பிடும் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதேநேரம், க.பொ.த (சா/த) பரீட்சைகள் திட்டமிட்டபடி ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
இன்று பாராளுமன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விடயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளார்.