தலைமன்னார் கடற்பகுதியில் நேற்றைய தினம் கடற்படையினர் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சுமார் 92 கிலோ கிராம் எடையுடைய ஹாஷிஷ் எனப்படும் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த போதைப்பொருட்களானது வெளிநாட்டுப் படகொன்றிலிருந்து மீட்கப்பட்ட நிலையில், மூன்று வெளிநாட்டுப் பிரஜைகளும் இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 92 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களுடன், போதைப்பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
நாட்டிற்குள் போதைப்பொருள் ஊடுருவலைத் தடுக்க கடற்படை தொடர்ந்தும் இது போன்ற விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.