எதிர்வரும் ஜனவரி முதல் நாட்டில் 10 மணி நேரம் நாளாந்தம் மின்வெட்டு அமுலாக்கப்படும் என்றும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஆனால் இது உண்மையற்ற அறிவிப்பு என்று விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் 10 மணி நேரம் மின்வெட்டு அமுலாக்கப்பட மாட்டாது என்றும், மின்வெட்டு நேரத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு போலியான அறிவிப்பை வெளியிட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
SUGGEST VIDEO