உலக்கிண்ண காற்பந்தாட்டத் தொடரை வென்ற ஆர்ஜன்டீனாவுக்கு அந்த நாட்டில் பெரும் வரவேற்பு வழங்கப்பட்டது.
கிண்ணத்தை சுமந்தவாறு லியோனோல் மெஸ்ஸி உள்ளிட்ட பல வீரர்கள் பேருந்து ஒன்றின் மேற்கூரையில் அமர்ந்து பயணித்தனர்.
இதன்போது வீதியின் குறுக்காக சென்ற மின் தந்தி ஒன்றில் அவர்கள் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.
எனினும் தக்க சமயத்தில் அவர்கள் அனைவரும் கீழே குணிந்ததால் மின் தந்தியில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக் கொண்டனர்.