இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பாக அரசாங்கம் எடுத்த தீர்மானம்

1 year ago
Sri Lanka
aivarree.com

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பல வாகனங்கள், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

அவை அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேரில் சென்று பார்வையிட்டார்.

அதன்பின்னர் கருத்து தெரிவித்த அவர், இந்த வாகனங்களை போதைப்பொருட்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காக பொலிசாருக்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக கூறினார்.

பரிந்துரைக்கும் காணொளி

சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வாகனங்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு வீணடையும் நிலையில் இருப்பதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.