அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வலுவாக இருப்பதால், இறக்குமதி செய்யப்படும் டயர்களின் விலையை 05% குறைக்க முடியும் என டயர் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட டயர்களின் கையிருப்பு அதிகமாக இருப்பதால், இப்போதைக்கு இந்த அளவே விலை குறைக்க முடியும் என அதன் தலைவர் சுனில் பொன்சேகா தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அடுத்த மூன்று மாதங்களுக்குள் புதிய கையிருப்பு கிடைத்த பின்னர், இறக்குமதி செய்யப்படும் டயர்களின் விலை சுமார் 15% குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.