வடமாகாண முன்னாள் ஆளுநரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட தலைவருமான ரெஜினோல்ட் குரே (75) காலமானார்.
நேற்றிரவு (12ஆம் திகதி) வாதுவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற சந்திப்பின் போது ரெஜினோல்ட் குரேவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர் அவர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததையடுத்து அம்புலன்ஸ் மூலம் நாகொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவர் காலமானதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
ரெஜினோல்ட் குரே, அமைச்சராகவும் மேல் மாகாண முதலமைச்சருமாகவும் இருந்தார் என்பதோடு, சரலமாக தமிழ் பேசக்கூடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.